For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொடுமையின் உச்சம்..!! 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.! விசாரணையில் வெளியான உண்மை.!

06:26 PM Feb 09, 2024 IST | 1newsnationuser4
கொடுமையின் உச்சம்     12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை   விசாரணையில் வெளியான உண்மை
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் பெற்ற தந்தையால் 12 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில் தந்தை மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியாமல் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையால் சிறுமி கற்பழிக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் தாயார் கூலி வேலை செய்து வருவது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தாய் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் மது போதையில் வந்த தந்தை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதனை வெளியே கூறினால் மகளை கொலை செய்து விடுவதாகவும் அந்த தந்தை மிரட்டி இருக்கிறான் . இதனைத் தொடர்ந்து தந்தையின் கொடுமைகளை வெளியே சொல்லாமல் சிறுமியாக இருந்துள்ளார். தற்போது சிறுமி கற்பம் அடைந்ததன் மூலம் இந்த கொடுமை வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

Tags :
Advertisement