முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

4 மாத கர்ப்பம்; 12 வயதில் நடந்த கொடூரம்.! போக்சோவில் கைது செய்யப்பட்ட கணவன்.!

04:51 PM Jan 06, 2024 IST | 1newsnationuser7
Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவீ மும்பையில் 12 வயது சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பை பகுதியில் உள்ள சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் விதிமுறைக்கு மாறாக 12 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார்.

Advertisement

மேலும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார் . இவரது தொடர்பாலியல் அத்துமீறலால் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அந்த சிறுமியின் கணவர் ஆன 29 வயது இளைஞனை கைது செய்தனர் .

மேலும் அந்த இளைஞர் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை திருமணத்தால் 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது .

Tags :
indiaMaharastra
Advertisement
Next Article