முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!.

12 Tamil Nadu fishermen captured! Serial atrocities of the Sri Lankan Navy!
07:52 AM Oct 27, 2024 IST | Kokila
Advertisement

Fishermen: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

Advertisement

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க ஏராளமான படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். அப்போது, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உடனடியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களில் மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவ குடும்பங்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: குட்நியூஸ்!. தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் இல்லை!. நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவிப்பு!

Tags :
Nagai FishermensSri Lankan Navy
Advertisement
Next Article