முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சோகம்... உ.பி-யில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு... 10 பேர் படுகாயம்...!

07:06 AM May 26, 2024 IST | Vignesh
Advertisement

உ.பி.யின் ஷாஜகான்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.

Advertisement

பூர்ணகிரிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பேருந்துக்குள் அமர்ந்து சிலர் தாபாவில் உணவு அருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மேல் மோதியதில் மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து ஷாஜகான்பூர் எஸ்.பி., அசோக்குமார் மீனா கூறியதாவது; இரவு, 11:00 மணியளவில், குத்தர் பி.எஸ்., பகுதியில், பஸ் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், பூர்ணகிரி செல்லும் பக்தர்கள், பேருந்தில் உள்ளே அமர்ந்து, சில பக்தர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர், அந்த வழியாக வந்த லாரி கட்டுக்கோட்டையில் இருந்து பேருந்தின் மீது மோதியதில் விபத்துக்கு உள்ளானது. இதில் மொத்தம் 11 பேர் இறந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

Tags :
bus accidentroad accidentuttarpradesh
Advertisement
Next Article