முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீவுத்திடலில் கேப்டன்...! அலைமோதும் கூட்டம்... பொதுமக்கள் அமர 1000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைப்பு....!

06:30 AM Dec 29, 2023 IST | 1newsnationuser2
Advertisement

விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இங்கு உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

Advertisement

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அமர்வதற்காக 1000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான பொதுமக்கள் தீவுத்திடலுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

Tags :
chennai peopletn governmentVijaykanth
Advertisement
Next Article