முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோர விபத்தில் 10 பேர் பலி!. ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக செல்லும்போது நிகழ்ந்த சோகம்!

UP Bulandshahr Bus Accident: Nearly 10 killed, 27 injured after pickup van collides with bus
08:06 AM Aug 19, 2024 IST | Kokila
Advertisement

Accident: உத்தர பிரதேசத்தில் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாதில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் தொழிலாளர்கள் சிலர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக அலிகார் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை, மீரட் நெடுஞ்சாலையில் சலேம்பூர் பகுதியில் அந்த வேன் சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர். போலீசார் கூறுகையில், 'விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஒன்பது பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பலியானவர்களில் இருவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை' என்றனர்.

Readmore: அமெரிக்க விபத்தில் தமிழர்கள் பலி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!. சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்!.

Tags :
10 people diedAccidentRaksha Bandhan celebrationup
Advertisement
Next Article