For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொடூரம்.! 1 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்.! 50 வயது முதியவர் வெறி செயல்.!

07:10 PM Feb 18, 2024 IST | 1newsnationuser4
கொடூரம்   1 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்   50 வயது முதியவர் வெறி செயல்
Advertisement

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நன்பரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது . அந்தப் பகுதியைச் சேர்ந்த 1 வயது குழந்தையை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தை நலமுடன் இருந்தாலும், மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 50 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement