For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வரும் 14-ம் தேதி சம்பவம் இருக்கு...! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...! வானிலை மையம் எச்சரிக்கை...!

06:14 AM Nov 12, 2023 IST | 1newsnationuser2
வரும் 14 ம் தேதி சம்பவம் இருக்கு     உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி     வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

வங்கக் கடல் பகுதிகளில் வரும் 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் 16-ம் தேதி நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் பரவலாக தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 14-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement