For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.15,000 பெறலாம்..! பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்களுக்கு சூப்பரான வாய்ப்பு...!

09:07 AM Jan 12, 2024 IST | 1newsnationuser2
மாதம் ரூ 15 000 பெறலாம்    பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்களுக்கு சூப்பரான வாய்ப்பு
Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி (CNC Operator-Turning Vertical Centre) NTTF நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.

Advertisement

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு SSC and NSDC Approval Certificate அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரைபெறலாம். மேலும் புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர தாட்கோ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.

Tags :
Advertisement