மக்களே..! வெயில் காரணமாக இன்று யாரும் பீச்சுக்கு செல்ல வேண்டாம்…! அதீத கடல் அலை வீசக்கூடும்…! RED ALERT கொடுத்த இந்திய வானிலை மையம்..!
காற்றின் போக்கு காரணமாக தென் தமிழகம் கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட கடலோரங்களில் அதீத கடல் அலைக்கான எச்சரிக்கையாக "ரெட் அலர்ட்" விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கர்நாடக மஹாராஷ்டிரா பகுதிகளில் அதீத கடல் அலை எழ வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் கடலோர பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கன்யாகுமரி, நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.