முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகனை வெட்ட வந்த கும்பல்.. கற்களை வீசி ஓட விட்ட தாய்..!! குவியும் பாராட்டு..

The gang that came to cut the son with a sword... The mother fought and saved her life by throwing stones
01:27 PM Aug 20, 2024 IST | Mari Thangam
Advertisement

மகாராஷ்டிராவில் வாளால் தாக்க வந்தவர்களிடமிருந்து, தனது மகனை ஒரு பெண் காப்பாற்றி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் ஜெய்சிங்பூரில் சாலையோரம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வாலிபர் ஒருவர் தனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு ஒரு இரு சக்கர வாகனம் வந்தது. அதில் இருந்து இறங்கிய மூன்று பேரில் ஒருவர், தன்னிடம் இருந்த வாளால் ஸ்கூட்டரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வாலிபர் மீது வெட்டினார்.

Advertisement

ஆனால் அவரது குறி தவறிவிட்டது. இதனால் ஸ்கூட்டரில் இருந்த வாலிபர் சுதாரித்துக்கொண்டார். அதோடு அவருடன் பேசிக்கொண்டிருந்த அவரது தாயார் கீழே கிடந்த கல்லை எடுத்து மூன்று பேர்மீதும் வீசி எறிந்தார். அப்பெண்ணுடன் அவரது மகனும் சேர்ந்து கற்களை எடுத்து மூன்று பேர்மீதும் வீசினார்

அத்தனை பயங்கர ஆயுதங்களைக் கண்டும் அஞ்சி ஓடிவிடாமல், தன் மகனைத் தாக்குகிறவர்களைத் துணிந்து எதிர்க்க முயன்றார். கற்களை கொண்டு வீசுவதை 3 பேருமே எதிர்பார்க்கவில்லை.. இதனால், உயிர் தப்பினால் போதும் என்று 3 பேரும் அங்கிருந்து தெறித்து ஓடுகிறார்கள்.

மகனை தாக்க வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய தாயின் துணிச்சல்தான், சோஷியல் மீடியாவில் பாராட்டப்பட்டு வருகிறது.. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசாரின் பார்வைக்கு சென்றுள்ளது.. தாக்கப்பட்ட நபர் சுனில் ராமப்பா லமணி என்பது தெரிய வந்துள்ளது. அவரது புகாரின் பேரில், வினோத் காசு பவார், அரவிந்த் காசு பவார் மற்றும் வினோத் பாபு ஜாதவ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

Read more ; ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மனைவி காலமானார்..!!

Tags :
crimemaharashtra
Advertisement
Next Article