For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுமுன்..! மதிமுக எம்.பி கணேசமூர்த்தி காலமானார்...! அதிர்ச்சியில் வைகோ...!

06:36 AM Mar 28, 2024 IST | Vignesh
சற்றுமுன்    மதிமுக எம் பி கணேசமூர்த்தி காலமானார்     அதிர்ச்சியில் வைகோ
Advertisement

மதிமுக ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்ற காலமானார்.

ஈரோடு எம்.பி.யும், மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான ஏ.கணேசமூர்த்தி (77) ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் கணேசமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர் ன. எம்.பி. கணேசமூர்த்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, பா.ஜ.,வைச் சேர்ந்த மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் கே.வி. அ.தி.மு.க.,வை சேர்ந்த ராமலிங்கம், எம்.பி.,யை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். கணேசமூர்த்திக்கு இம்முறை கட்சி சீட்டு மறுக்கப்பட்டது. திருச்சி லோக்சபா தொகுதியை, ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., ஒதுக்கியது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

Tags :
Advertisement