கோவையில் பரபரப்பு.. 10 மணிக்கு மேல் பிரச்சாரம்...? Annamalai வாகனத்தை நிறுத்திய போலீஸார்...!
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் காரை போலீசார் வழிமறித்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று இரவு கோவை சூலூர் பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு 10 மணிக்கு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் தனது அறைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரவில் மணி 10-ஐ தாண்டியதால் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என கூறினர். அப்போது அண்ணாமலை தான் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தான் செல்கிறேன் என தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; அற்ப காரணங்களுக்காக மீண்டும் எங்கள் பிரச்சார வாகனத்தை நிறுத்தியதால், காவல்துறையின் மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்குப் பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற சாக்குப்போக்கின் கீழ் போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர்.
நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்று விளக்கினாலும், எங்கள் வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன, மேலும் எங்கள் பிரச்சார வாகனம் செல்லும் முன் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் 2000 தமிழ்நாடு பாஜக கட்சியினரை மட்டுமே சந்திக்க விரும்பினோம். அவரது நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை என்று காவல்துறை அதிகாரியிடம் விளக்கிய போதிலும், அவர்கள் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினர். ஏப்., 19ல், கோவையில் 3 ஆண்டு கால தவறான ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.