For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிளாம்பாக்கம்.. ஜனவரி 24 முதல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் முதல் இயக்க திட்டம்...!

06:30 AM Jan 14, 2024 IST | 1newsnationuser2
கிளாம்பாக்கம்   ஜனவரி 24 முதல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் முதல் இயக்க திட்டம்
Advertisement

அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் " அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது (ம) பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

Advertisement

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து" தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து முனையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க முடியாது.

அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் (SETC) இம்முனையத்திலிருந்து இயங்கி கொண்டு வருகிறது. பொங்கலுக்கு பிறகு, இம்முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் (Omni Buses) 24.01.2024 முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (MTC) போதுமான அளவு தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருகிறது. இம்முனையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப இன்று மட்டும் சுமார் 4000 நடைகள் (Trips) சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன.

இம்முனையத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் சீரான நிலையில் இயக்குவதற்கும் மற்றும் பொது மக்களுக்கு எந்த ஒரு குழப்பம் இல்லாமல் படிப்படியாக அனைத்து பேருந்துச் சேவைகளும் தொடர்வதற்கும் இக்கூட்டம் நடைபெற்றது. இம்முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டிற்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி. பயணிகள் உதவி மையம், பயணிகளை ஏற்றி செல்லும் மின்கல ஊர்திகள். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மின்கல ஊர்தி (Battery Vehicle for Differently-abled Persons), பயணிகள் பிரதான முனையத்திலிருந்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கு சுலபமாக வருவதற்கு மாற்று பாதை (MTC Plaza) அமைக்கப்படுவது மற்றும் உணவகங்கள் போதுமான அளவில் உள்ளனவா என இன்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பயணிகளிடம் விசாரித்த போது, இம்முனையத்தில் தேவையான அனைத்து வசதிகள் உள்ளது எனவும் தெரிவித்தனர். குறிப்பாக பயணிகளுக்கு ஆங்காங்கே பேருந்து வழித்தட நடைமேடை பலகை (Platform Destination Boards) போதுமான அளவில் வைக்க தெரிவித்தனார். மேலும் இம்முனையத்தில் பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை (Digital Signage Boards) வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து முனையத்தை "பிளாஸ்டிக்- இல்லா முனையமாக" (Plastic-free Zone) செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags :
Advertisement