முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.! ₹15,750-50,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு.! இப்பவே அப்ளை பண்ணுங்க.!

09:13 PM Jan 08, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஊரக வளர்ச்சித் துறையில் இரவு நேர காவலர் பணிக்கு இரண்டு காலியிடங்களும் அலுவலக உதவியாளர் பணிக்கு மூன்று காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அறிவித்திருக்கிறது.

Advertisement

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச 32 வரை இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர காவல் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது என்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாத சம்பளமாக ரூபாய் 15,700 – 50,000/- வரை வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நேர காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 09.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 19.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை ஆணையாளர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), ஊராட்சி ஒன்றியம், மண்டபம் (இ) உச்சிப்புளி – 623535 என்ற முகவரிக்கதபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய https://ramanathapuram.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags :
8th Passed OutEmployment Vacancygovt jobstn jobs
Advertisement
Next Article