For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!. பாதுகாப்புப் படை அதிரடி!

09:15 AM Dec 19, 2024 IST | Kokila
என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை   பாதுகாப்புப் படை அதிரடி
Advertisement

Terrorists Attack: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் பெஹிபாக் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நடத்தப்பட்ட என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 2 பாதுகாப்புப் படை வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Readmore: இந்த நாட்டில் நிலம், மின்சாரம், தண்ணீர், கல்வி ஆகியவை இலவசம்.. ஆனால் இந்த ஒரு விதியை பின்பற்ற வேண்டும்…

Tags :
Advertisement